Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திசையன்விளை, உலக இரட்சகர் தேவாலய 136வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்

செப்டம்பர் 27, 2020 08:25

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,  திசையன்விளை, உலக இரட்சகர் தேவாலயத்தின், 136வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, கத்தோலிக்க கிறிஸ்தவ,  வழிபாட்டு தலங்களில் ஒன்றாகிய, திருநெல்வேலி மாவட்டம்,  திசையன்விளை,  உலக இரட்சகர் தேவாலயத்தின்,   136வது ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருட்தந்தை ஜெரால்ட் ரவி அடிகளார்,  கொடியினை அர்ச்சித்து,  தேவாலய கொடிக்கம்பத்தில், அதனை ஏற்றி வைத்தார். பின்னர் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அடுத்த மாதம் (அக்டோபர்) 4ம் தேதி முடிய, மொத்தம் 10 நாட்கள் நிகழ்கின்ற இத்திருவிழாவில், நாள்தோறும் காலையில் திருபவனி, திருப்பலி ஆகியனவும்,  மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியனவும் நடைபெறுகின்றன.

9ம் நாள் திருவிழாவின் மாலையில் ஆராதனையும், மறுநாள் 10ம் நாளான, அடுத்த மாதம் 4- தேதி, திருவிழாவின் நிறைவு நாள் அன்று,  பிற்பகல் 2 மணிக்கு, தேவாலய வளாகத்திற்குள், உலக ரட்சகரின், சப்பரப்பவனி  நடைபெறுகிறது. திருவிழாவிற்கான, அனைத்து ஏற்பாடுகளையும், தேவாலயத்தின் பங்குதந்தை கிறிஸ்டியான் அடிகளார்,  செய்து வருகிறார்.

தலைப்புச்செய்திகள்